Wednesday, November 18, 2015

மழையால் பாதிப்பா? இரவிலும் '104'ஐ அழைக்கலாம்



சென்னை:'மழை பாதிப்புகளுக்கு, 24 மணி நேரமும், '104' சேவை மையத்தை தொடர்பு கொள்ளலாம்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது.தமிழகத்தில், தொலைபேசி வழியே மருத்துவ ஆலோசனை தரும் வகையில், '104' சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, மனநல ஆலோசனை, மருத்துவ ஆலோசனைகள், மருத்துவமனைகள், ரத்த வங்கிகள், கண் தானம் குறித்த தகவல்கள் தரப்படுகின்றன.இதுதவிர, மழையால் ஏற்படும் பாதிப்பு, வெள்ள பாதிப்புகளுக்கும் உதவி கோரியும், சுகாதாரத் துறை சார்ந்த புகார்கள் குறித்தும், 24 மணி நேரமும் மக்கள் தொடர்பு கொள்ளலாம்; தீர்வு காண வழிவகுக்கப்படும் என, சேவை மையம் அறிவித்து உள்ளது.


No comments:

Post a Comment