புதுடில்லி : நாட்டில், கட்டடங்களின் கூரை மேல் நிறுவப்பட்ட, சூரிய ஒளி பேனல் கட்டமைப்பு மூலம் பெறப்படும் மின்சாரம், 525 மெகாவாட்டாக உயர்ந்துள்ளது; இதில், தமிழகம் முன்னணி யில் திகழ்கிறது.
கட்டடங்களின் கூரைகளில் நிறுவப்பட்ட, சூரிய ஒளி மின் கட்டமைப்பு மூலம் பெறப்படும் மின்சாரம் குறித்த அறிக்கை, நேற்று வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது:கடந்த, 12 மாதங்களில், நாடு முழுவதும், கட்டடங்களில் நிறுவப்பட்ட சூரிய ஒளி மின் கட்டமைப்பு மூலம், 525 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இது, முந்தைய ஆண்டை விட, 66 சதவீதம் அதிகம்; முந்தைய மூன்று மாதங்களில் நிறுவப்பட்ட, சூரிய ஒளி மின் கட்டமைப்பு திறன் அளவு, கடந்த ஒரே ஆண்டில் நிறுவப்பட்டு உள்ளது.
கட்டடங்களின் கூரை மீதான, சூரிய ஒளி மின் கட்டமைப்பு மூலம், 2020ல், 6.5 கிகா வாட் மின் உற்பத்தி செய்யப்படும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. இத்துறையில், தமிழகம் முன்னணியில் உள்ளது. அதைத் தொடர்ந்து, மஹாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்கள் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கின்றன. அடுத்த சில ஆண்டுகளில், கட்டடங்கள் மீதான சூரிய ஒளி மின் கட்டமைப்பு நிறுவும் துறை, கணிசமான வளர்ச்சி பெறும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment