Friday, October 30, 2015

நெற்பயிரில் புகையான் தாக்குதலை கட்டுப்படுத்த வழிமுறைகள் : வேளாண் அதிகாரி விளக்கம்



வாடிப்பட்டி வேளாண்மை கோட்டம் வேளாண்மை உதவி இயக்குநர் .ராமநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை:
 வாடிப்பட்டி வேளாண்மை கோட்டத்தில் நெல் பயிரிட்டுள்ள விவசாயிகள் தற்போது நிலவிவரும் தட்ப வெப்ப நிலையில் நெற்பயிரில் புகையான் தாக்கிட வாய்ப்பு உள்ளது. இதனைக் கட்டுப்படுத்த பின்வரும் முறைகளை கடைபிடிக்க வேண்டும்.
  அதாவது, பயிருக்கு அதிக அளவில் யூரியா இடுவதை தவிர்க்க வேண்டும். பூச்சிமருந்து அடிக்கும் முன்பு வயலில் தேங்கியுள்ள தண்ணீரை வடித்து விட வேண்டும். வேம்பு எண்ணெய் 3 சதவிகிதம் ஹெக்டேருக்கு 15 லிட்டர் மற்றும் பாஸலோன் 35 இசி 1500 மில்லி லிட்டர் ஹெக்டேருக்கு தெளிக்க வேண்டும். அல்லது அஸிபேட் 75 சதவிகிதம் எஸ்பி 666- 1000 கிராம் ஹெக்டேருக்கு அல்லது இமிடாகுளோபிரிட் 17.8 எஸ்.எல். 100. 125 மில்லி லிட்டர் ஹெக்டேருக்கு தெளிக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளார்.
 மேலும் விவசாயிகள் தங்களது வயல்களில் புகையான் தாக்குதல் காணப்பட்டால் உடனடியாக வாடிப்பட்டி வேளாண் அலுவலர்களை அணுகிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment