Thursday, November 5, 2015

கண்களை காத்திடுவோம்!



நமது உடல் உறுப்புகளில் கண்கள் மிகவும் முக்கியமானவை. எனவே அவற்றை கவனமாகப் பாதுகாப்பது மிகவும் முக்கியம்.
கண்களைப் பாதுகாத்திடும் சில வழிமுறைகளை அறிந்திடுவோம்...

கண்களின் அழகில் தூக்கத்துக்கு ஒரு முக்கிய இடம் இருக்கிறது. கண்களின் அழகைப் பராமரிக்க தினமும் எட்டு மணிநேரத்  தூக்கம் அவசியம்.
அதோடு, கால்சியம், வைட்டமின்கள் நிறைந்த உணவை உட்கொள்ள வேண்டும். அதாவது பால், பால் உணவுகள், கீரை வகைகள், முட்டை, மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறப்பழங்கள், பச்சைக் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்.

நேரம் கிடைக்கும் போதெல்லாம் கண்களை, கடிகாரம் சுற்றும் முறையிலும், எதிர்முறையிலும் மூன்று முறை சுற்ற வேண்டும். மேலும் அருகில் உள்ள பொருட்களை பார்த்துவிட்டு தூரத்தில் உள்ள பொருட் களை பார்க்க வேண்டும்.

கட்டைவிரலை நடுவில் வைத்துக்கொண்டு அதனை இடமாகவும் வலமாகவும் விரலை மட்டும் நகர்த்தி தலையை திருப்பாமல் வெறும் பார்வையை மட்டும்          திருப்பிப் பார்க்க வேண்டும். தினமும் இந்தப் பயிற்சியை தொடர்ந்து செய்தால் கண்கள் புத்துணர்ச்சியுடன் காணப்படும்.

நீண்ட நேரம் கணினி அல்லது தொலைக்காட்சியைப் பார்ப்பவர்கள் அடிக்கடி ஏதேனும் பச்சைவெளியைப் பார்க்கலாம் அல்லது கண்களுக்கு குளிர்ச்சிதரும் நீல நிறங்களைப் பார்க்கலாம்.

ஆரஞ்சுப் பழத்தை சாறாகப் பிழிந்து பிரிட்ஜில் வைத்து கட்டியான பின்னர் ஒரு துணியில் கட்டிக்கொண்டு கண்களுக்கு மேல் ஒத்தி எடுத்தால் கண்கள் குளிர்ச்சியாக இருக்கும்.

கண்களை குளிர்ச்சியாக வைத்துக்கொள்கிறேன் என்று தரமற்ற குளிர் கண்ணாடிகளை வாங்கி அணிவதைத் தவிர்க்க வேண்டும். கண்ணில் சிறு பாதிப்பு ஏற்படுவதாகத் தெரிந்தாலும் உடனே கண் மருத்துவரை அணுகி பரிசோதிக்க வேண்டும்.

இப்படியெல்லாம் கவனமாக இருந்தால் நமது விழி நமக்கு என்றும் வழி காட்டும்! 

No comments:

Post a Comment