Thursday, November 5, 2015

பாசனத்துக்காக பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு அணைகள் நாளை திறப்பு: ஜெயலலிதா அறிவிப்பு


சென்னை, நவ. 5–
முதல்அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களிலிருந்து பிசான பருவ சாகுபடிக்காக தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் திறந்துவிடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன.
வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள தாமிரபரணி ஆற்றின் கீழ் 11 கால்வாய்களின் மூலம் பயன்பெறும் நேரடி மற்றும் மறைமுக பாசனப் பரப்புகளுக்கு பிசான பருவ சாகுபடிக்காக பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களிலிருந்து 6.11.2015 முதல் தண்ணீர் திறந்து விட நான் ஆணையிட்டுள்ளேன்.
இதனால், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களிலுள்ள 86,107 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு முதல்அமைச்சர் ஜெயலலிதா கூறி உள்ளார்.




No comments:

Post a Comment