Wednesday, November 18, 2015

வாழை சாகுபடியார்களின் கவனத்திற்கு...


வாழையில் சாம்பல் மற்றும் போரான் சத்து குறையை நிவர்த்தி செய்ய... சாம்பல் சத்து பற்றாக்குறை அறிகுறிகள் 
முதிர்ந்த இலைகள் ஓரங்களில் இருந்து ஆரஞ்சு கலந்த மஞ்சள் நிறமாக மாறும். பின்னர் இலையின் ஓரங்கள் காய்ந்தும் உள்நோக்கி சுருண்டும் காணப்படும். இலையின் அளவும் சிறுத்து விடும். முற்றிய நிலையில் இலைகள் வெளிவராது மற்றும் பூ வருவதும் தாமதமாகும். வாழைப்பழத்தில் தரமும் குன்றிவிடும்.
நிவர்த்தி: 20 கிராம் பொட்டாசியம் குளோரைடை ஒரு லிட்டர் நீரில் கரைத்து இலைவழியாக 10 நாட்களுக்கொரு முறை அறிகுறிகள் மறையும் வரை தெளித்து கட்டுப்படுத்தலாம்.
போரான் சத்து பற்றாக்குறை அறிகுறிகள்: இளம் இலைகளில், சில நரம்புகள் பக்கம் பக்கமாக நெருக்கமாகவும், நரம்புக்கு இணையாக மஞ்சள் நிறப்புள்ளிகள் வளைந்து வளைந்து ஏணி போன்ற தோற்றத்தில் உருவாகும். இலைக்குருத்துக்கள் விரியாமல், இளம் இலைகள் கிழிந்து, பழுப்பு நிறமாக மாறும் பழங்களில் வெடிப்பு தோன்றும்.
நிவர்த்தி: இவ்வாறான அறிகுறிகள் தென்பட்டதும் நூறு லிட்டர் நீரில் 200 கிராம் போராக்ஸ் கலந்த கரைசலை இலைகளின் மேல் தெளித்து கட்டுப்படுத்தலாம்.
-
 டாக்டர் .குணசேகரன்,
பருத்தி ஆராய்ச்சி நிலையம்,
திருவில்லிபுத்தூர்-626 125.


No comments:

Post a Comment