Monday, September 19, 2016

கால்நடை தீவனப்பயிர் சாகுபடி விவசாயிகளுக்கு மானியம்


தீவனப்பயிர் சாகுபடி மற்றும் தீவன விதைகள் உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு கால்நடைதுறை சார்பில் 100 சதவீதம் மானியம் வழங்கப்பட உள்ளது.
கால்நடை பராமரிப்பு துறை சார்பில் தீவன அபிவிருத்தி திட்டங்கள் பால்வள நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்தப்படவுள்ளது. அதனடிப்படையில், இறவையில் தீவனப்பயிர் சாகுபடி திட்டத்தின் கீழ் அதிக மகசூல் தரும் கம்பு பயிரிடும் திட்டம் 250 ஏக்கரிலும்.
மானாவரியில் தீவனப்பயிர் சாகுபடி திட்டத்தின் கீழ் தீவனச்சோளம், தீவன தட்டைப்பயிறு பயிரிடும் திட்டம் 1000 ஏக்கரில் செயல்படுத்தப்படவுள்ளது. இதற்காக தீவனச்சோளம் மற்றும் தீவனதட்டைப்பயிறு விதைகள் 100 சதவீதம் மானியத்திலும், தீவன கரணை, தீவன விதைகள் 100 சதவீத மானியத்திலும் வழங்கப்பட உள்ளது.
அறுவடையின் பொழுது அவர்களிடமிருந்து சந்தை மதிப்புடன் கூடுதலாக கிலோ ஒன்றுக்கு ரூ.10 ஊக்கத்தொகை அளிக்கப்பட்டு விதைகள் கொள்முதல் செய்யப்படவுள்ளது. தீவனச் சோள விதைகள் 15 ஏக்கரிலும், தீவன
தட்டைப்பயிறு
விதைகள் 15 ஏக்கரிலும் உற்பத்தி செய்யப்பட உள்ளது.
பயிற்சி தொகை: நவீன தீவன உற்பத்தி தொழில்நுட்பங்கள் பயிற்றுவிக்கும் திட்டத்தின் கீழ் 100 கால்நடை வளர்ப்போருக்கு செட்டிநாடு மாவட்ட கால்நடை பண்ணையில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இதற்காக அவர்களுக்கு தலா 500 ரூபாய் பயிற்சி தொகையாக வழங்கப்படவுள்ளது. புரசத்து மிகுந்த அசோலா பாசி வகை பசுந்தீவன உற்பத்தி திட்டத்தில் 120 பேருக்கு 100 சதவீத மானியத்தில் பிளாஸ்டிக் தட்டுகள் வழங்கப்படும். விலையில்லா வெள்ளாடு, செம்மறி ஆடுகள் வழங்கப்பட்ட 1,500 பயனாளிகளுக்கு தலா 10 அகத்தி மரக்கன்றுகள் 100 சதவீத மானியத்தில் வழங்கப்பட உள்ளது. எனவே விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் அருகிலுள்ள கால்நடை பராமரிப்புத்துறை அலுவலகங்களை தொடர்பு கொண்டு பயனடையலாம் என, கலெக்டர் வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.


Source : Dinamalar

No comments:

Post a Comment