Monday, September 26, 2016

தரமான விதைகளை தேர்வு செய்வதன் மூலம் துவரை உற்பத்தியை அதிகரிக்க முடியும் :



thuvarai
தொழில்நுட்ப முறைகளைப் பின்பற்றி தரமான துவரை விதைகளை உற்பத்தி செய்தால், விளைச்சலை அதிகப்படுத்தி விவசாயிகள் கூடுதல் லாபம் பெறமுடியும் என, திண்டுக்கல் மாவட்ட விதைச் சான்று உதவி இயக்குநர் பெ.விஜயராணி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளது: ஐக்கிய நாடுகள் சபையில் உள்ள உணவு மற்றும் விவசாய அமைப்பு, 2016 ஆம் ஆண்டை உலக பயறு ஆண்டாக அறிவித்துள்ளது. அதன்படி, இந்தியாவிலும் பயறு சாகுபடி பரப்பை அதிகரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அதிக அளவில் துவரை சாகுபடி செய்யப்படுகிறது. துவரை சாகுபடி செய்வதற்கான நிலம் தேர்ந்தெடுத்தல், உரமிடுதல், கலவன் அகற்றுதல் போன்ற நடைமுறைகளைப் பின்பற்றினால், உற்பத்தியை அதிகரிக்க முடியும்.

  தரமான விதைகள் என்பது, தன்னுடைய இனத் தூய்மையில் சிறிதும் குன்றாமல், களை விதை, பிற ரக விதை, நோய் தாக்குதல் விதை இல்லாமல் இருக்கவேண்டும். மேலும், தரமான விதை அதிக வீரியத்துடனும், முளைப்பு திறன் அதிகமாகவும் இருக்கும். இதனால், தரமான செடிகளின் எண்ணிக்கையை பராமரிக்க முடியும்.

பயறு வகை விதைப் பண்ணைகளுக்கு மானியம்: பயறு வகை விதைப் பண்ணை அமைக்கும் விவசாயிகளுக்கு மத்திய-மாநில அரசுகள் சார்பில், உற்பத்தி மற்றும் விநியோக மானியம் வழங்கப்படுகிறது. விதைப் பண்ணை அமைக்க விரும்பும் விவசாயிகள், அரசுக்கு வழங்க வேண்டுமெனில், தங்கள் பகுதியில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை அணுகலாம் எனத் தெரிவித்துள்ளார்.

Source : Dinamani

No comments:

Post a Comment