Monday, September 19, 2016

சூரியஒளி மின்சாரத்தில் விவசாயம்: பூஞ்சோலை விவசாயி புது முயற்சி


கிருஷ்ணராயபுரம் அடுத்த பூஞ்சோலை பகுதி விவசாயி, சூரியஒளி மின்சாரம் மூலம் விவசாயம் செய்து வருகிறார். கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அடுத்த பூஞ்சோலை கிராம விவசாயிகள், தற்பொது அவர்களுக்கு தேவையான மின் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக, தங்கள் விளை நிலங்களில் சூரிய மின்சக்தியை பயன்படுத்தி வருகின்றனர். அதன்மூலம், பல்வேறு வகைகளில் விவசாயம் செய்யும் பணிகளில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதுகுறித்து, அப்பகுதியை சேர்ந்த விவசாயி சுப்பிரமணியன் கூறியதாவது: இன்றைய சூழ்நிலையில், நவீன முறை விவசாயத்தில், பெரும்பாலான விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதன்படி, இப்பகுதியில் உள்ள விவசாயிகள், சூரியஒளி மின்சாரம் மூலம் விவசாயம் செய்து வருகிறோம். தற்பொது, சூரிய மின்சாரம் தயாரிக்கும் சோலார் பேனல்கள், நான்கு லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டு, மோட்டார் மூலம் எடுக்கிறோம். குறைந்த செலவில், அதிக லாபம் தரக்கூடிய பப்பாளி சாகுபடி செய்து, மாதம், 10 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் பெறுகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Source : Dinamalar

No comments:

Post a Comment