Monday, September 19, 2016

வேளாண் விரிவாக்க மையங்களில் மான்யத்துடன் விதை விநியோகம்

கரூர் வட்டாரத்தில் நடப்பு சம்பா பருவத்தில் நெல் நடவு பணி மேற்கொள்ள ஏதுவாக போதிய அளவு விதை நெல் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

ஐ.ஆர். 20 க்கு மாற்றாக அதே குணங்களைக் கொண்ட கோ.ஆர் 50 குறுகிய கால சன்ன ரக நெல்லும், ஆந்திர பொன்னிக்கு மாற்றாக அதிக மகசூல் தரவல்ல கோ.ஆர் 51 மத்திய ரக நெல்லும் இருப்பில் உள்ளது. தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தில் கிலோ விதைக்கு ரூ.10 மானியம் வழங்கப்படும்.

விவசாயிகள் உரிய சான்றுடன் வெண்ணமலை,வேலாயுதம்பாளைம் துணை வேளாண் விரிவாக்க மையங்களையோ அல்லது 91598 09701 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளுமாறு கரூர் வெண்ணைமலை வேளாண் விரிவாக்க மைய உதவி இயக்குநர் ப. சிவானந்தம் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source : Dinamani

No comments:

Post a Comment