Tuesday, July 25, 2017

நிரந்தர வேளாண் கலாசாரப் பண்ணை: விவசாயி பாமயனின் பன்முகம்


மதுரையில் திருமங்கலம், டி.கல்லுப்பட்டி, கள்ளிக்குடி உள்ளிட்ட பகுதிகளில் பருத்தி மற்றும் சிறுதானியங்கள் சாகுபடி மானாவாரியாக நடக்கிறது. 
தண்ணீர் பஞ்சம் மிகுந்த இப்பகுதியில் விவசாயத்தில் சாதனை படைப்பது சாதாரண காரியமல்ல. தன்னம்பிக்கை, விடாமுயற்சி, உழைப்பை மூலதனமாக கொண்டு விவசாயத்தில் சாதனை படைத்து வருகிறார் இயற்கை விவசாயி பாமயன். திருமங்கலம் - டி.கல்லுப்பட்டி ரோட்டில் சோலைப்பட்டி விலக்கில் 'நிரந்த வேளாண் கலாச்சாரப் பண்ணை' (பெர்மனன்ட் அக்ரி கல்சர் பார்ம்) நடத்தி வருகிறார். இங்கு சுட்டெரிக்கும் வெயிலில் சொட்டு நீர் கூட உடனே ஆவியாகி விடும். உப்புச்சுவை மிக்க நீரில் இயற்கை விவசாயம் செய்வதற்காக உப்புச்சுவையை இயற்கை முறையில் மாற்றி தினமும் பயன் படுத்துகிறார் பாமயன்.இது எப்படி சாத்தியம் என்பது குறித்து பாமயன் கூறியதாவது: நிரந்த வேளாண் கலாசாரப் பண்ணையை உருவாக்குவதற்காக 
6 அடி ஆழம், 40 அடி அகலத்தில் மண் தொட்டி அமைத்தேன். அதில் பாலிதீன் பாய் விரித்து 194 லட்சம் லிட்டர் உப்பு நீர் தேக்கினேன். 
உப்புச்சுவை மற்றும் தண்ணீர் சத்துள்ளதாக (அமிலோ ஆசிட் வாட்டர்) மாற்றுவதற்காக தலா 400 எண்ணிக்கையில் ஜிலேபி கெண்டை, கட்லா, புது கெண்டை, விரால் மீன் குஞ்சுகளை தொட்டியில் விட்டுள்ளேன். மீன் குஞ்சுகளின் கழிவுகள் தண்ணீரை சத்துள்ளதாக மாற்றி விடுகிறது. அந்த தண்ணீரை வயல்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை பாய்ச்சுகிறேன். மீண்டும் தொட்டியில் தண்ணீர் நிரப்புகிறேன். தொட்டியில் இருந்து மோட்டார் மூலம் தண்ணீர் எடுத்து மண் இல்லாத உணவு தானியங்கள் வளர்த்து வருகிறேன். தொட்டி அமைக்க 70 ஆயிரம் ரூபாய் செலவானது. அவரவர் வசதிக்கேற்ப குறைந்த செலவிலும் தொட்டி அமைக்கலாம். நிரந்தர வேளாண் கலாசாரப் பண்ணை என்பது மீன் கழிவு நீரில் விவசாயம், மாட்டுச்சாணத்தில் மண்புழு உரம், மீன்களுக்கு உணவாகும் மண்புழு, மீன் வளர்ப்பில் லாபம் என ஒருங்கிணைந்த இயற்கை விவசாயத்தை குறிக்கும் என்றார்.
தொடர்புக்கு 98420 48317.
- கா.சுப்பிரமணியன், மதுரை.

Source : Dinamalar

No comments:

Post a Comment