Thursday, July 20, 2017

பயிர்களை காக்கும் பூச்சிகள்

பூச்சிகளை கட்டுப்படுத்த ரசாயனங்களை பயன்படுத்துவதை தவிர்த்து பயிர்களை பாதுகாக்கும் பூச்சிகளை பயன்படுத்தி, அழிக்கும் பூச்சிகளை ஒழிக்க வேண்டும். பூச்சிகளை தாக்கும் தன்மைக்கேற்ப இயற்கை எதிரிகளை ஒட்டுயிர், ஒட்டுண்ணி, இரை விழுங்கிகள் என வகைப்படுத்தலாம்.

ஒட்டுயிர்
வேறு ஒரு உயிரை சார்ந்து வாழ்வது. தங்கியிருக்கும் இடத்திற்கு தீங்கு விளைவிக்காமல் தனது நிலைப்பு தன்மைக்காக மற்ற உயிரினத்தை சார்ந்திருக்கும்.

ஓட்டுண்ணி
வேறு ஒரு உயிரினத்தை சார்ந்து வாழ்வது. தான் சார்ந்த இனத்தை அழித்து வாழும். 

இரை விழுங்கி
வேறு ஒரு உயிரை வேட்டையாடி உண்பவை இரை விழுங்கிகள்.

காண்டாமிருக நாவாய்ப்பூச்சி
சோயா பீன்ஸ், நிலக்கடலை, தட்டைப்பயிறு, பருத்தி, ஆமணக்கு, நெல், முட்டைக்கோஸ், வெண்டை, எலுமிச்சை, கரும்பு போன்ற பணப்பயிர்களை தாக்கும் பூச்சிகளை தனது விஷத்தன்மை கொண்ட எச்சிலை உட்செலுத்தி உடனுக்குடன் கொன்று விடும்.

பைரைட் வண்டு
இது தத்துப்பூச்சிகள், திரிப்ஸ், சிறிய கம்பளிப் புழுக்கள், இலை தின்னும் பூச்சிகளை விழுங்கும். தனது ஊசி போன்ற கொடுக்குகளால் பூச்சிகளை தாக்கி கொல்லும்.

பாலிடாக்ஸ் வண்டு
இவை அழிவு நாவாய்ப் பூச்சி என அழைக்கப்படுகிறது. இவை தங்களை விட அளவில் பெரிய இரையை தாக்கி ஊசி போன்ற தமது வாய் உறுப்புகளில் உள்ள நச்சை உட்செலுத்தி கொல்லும்.

ரிப்பிள் வண்டு
இவை நீர் நிலைகளில் காணப்படும், குளங்கள், நெல் வயல்கள், குட்டைகளில் தென்படும். கொசுக்கள் இதன் உணவு.

கிரீன் மிட்ரிட் வண்டு
இவை நெற்பயிரை தாக்கும் பூச்சிகளை அழித்து, அவற்றின் பெருக்கத்தை நிறுத்தும். நாள் ஒன்றுக்கு நெற் பயிர் அழிப்பானின் 10 முட்டைகள் அல்லது இரண்டு முதிர்ந்த பூச்சிகளை உண்ணும்.

பிரேயிங் மேண்டிட்ஸ் 
இடத்திற்கு ஏற்ப வண்ணங்களை மாற்றி கொள்ளும். தன் முன் கிடைக்கும் அனைத்து பூச்சிகளையும் உண்ணும். பகலில் மட்டும் வேட்டையாடும்.
இவ்வாறு பயிர் காக்கும் பூச்சிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி பயிரில் தீங்கு விளைவிக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்.
ந. ஜெயராஜ் 
துணை இயக்குனர்
நீர் மேலாண்மை பயிற்சி நிலையம், மதுரை.


Source : Dinamalar

No comments:

Post a Comment