Monday, September 28, 2015

ஆடு வளர்ப்பு தொழில்நுட்ப பயிற்சி :



பனமரத்துப்பட்டி: சந்தியூர் வேளாண் அறிவியல் நிலையத்தில், அக்டோபர் 1ம் தேதி, பரண் மேல் வெள்ளாடு வளர்ப்பு தொழில் நுட்ப பயிற்சி நடக்கிறது.

இது குறித்து, சந்தியூர் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீராம் கூறியதாவது: வேளாண் சார்ந்த உப தொழிலில், வெள்ளாடு வளர்ப்பு, குறைந்த முதலீட்டில், நிறைய லாபம் தரும் தொழிலாக உள்ளது. விவசாயிகள், பண்ணை மகளிர் மற்றும் இளைஞர்கள் பயன் பெறும் வகையில், அக்டோபர் , 1ம் தேதி, காலை, 9.30 முதல் மாலை, 4 மணி வரையில், சந்தியூர் வேளாண் அறிவியல் நிலையத்தில், பரண் மேல் ஆடு வளர்ப்பு தொழில் நுட்ப பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சியில் கலந்துகொள்ள விரும்புவோர், 30ம் தேதிக்குள் தங்கள் பெயரை, 0427-2422550 எண்ணில் பதிவு செய்துகொள்ள வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

Source : Dhinamalar

No comments:

Post a Comment