Tuesday, June 27, 2017

மழை தூவான் கருவி மூலம் வாழை சாகுபடி

குளித்தலை அடுத்த, மருதூர் டவுன் பஞ்சாயத்து, பணிக்கம்பட்டி, குரும்பக்கரை பகுதியில், ரமேஷ் என்பவர், தனக்கு சொந்தமான, நான்கு ஏக்கர் வாழை விவசாயத்திற்கு போதிய தண்ணீர் வசதியின்றி சிரமப்பட்டு வந்தார். நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால், குறைந்த தண்ணீரை வைத்துக் கொண்டு, வாழையை காப்பாற்ற முயற்சி செய்தார். இதற்காக, வேளாண் துறையின் உதவியுடன், கிணற்றில் உள்ள மின் மோட்டார் குழாய் மூலம், தண்ணீர் எடுத்து, வாழைப்பயிருக்கு மழை தூவான் முறையில், தண்ணீர் பீய்ச்சி அடித்து, விவசாய பணிகளை மேற்கொண்டு வருகிறார். சொட்டுநீர் பாசன முறை என்பதால், குறைந்த முதலீட்டில், வாழையை காப்பாற்றும் பணியில், சில விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

Source : Dinamalar

No comments:

Post a Comment