Thursday, June 22, 2017

விதைப்பண்ணை அமைக்க விவசாயிகளுக்கு அழைப்பு

அந்தியூர் பகுதி விவசாயிகள், நிலத்தில் விதைப்பண்ணை அமைத்து அதிக லாபம் ஈட்ட வேளாண் துறை அழைப்பு விடுத்துள்ளது. பாசன வசதி கொண்ட விவசாயிகள், விதைப்பண்ணை அமைக்கத் தேவையான ஆதார விதைகளை அரசு வழங்குகிறது. அவற்றை, வேளாண்துறை வழிகாட்டுதல் படி விதைக்க வேண்டும். முளைப்புக்கு பிறகு, விதை சான்றளிப்புத் துறையில் பதிவு செய்யப்படும். பின்னர் வேளாண்மைத்துறை மற்றும் விதை சான்றளிப்புத் துறை ஆலோசனைப்படி, பராமரித்து அறுவடை செய்ய வேண்டும். விதைகளை அதிக விலைக்கு வேளாண்மை துறையே கொள்முதல் செய்து கொள்ளும். விவசாயிகளுக்கு ஊக்கத் தொகையும் உண்டு. அந்தியூர் ஒன்றியத்தில் ராகி, உளுந்து, பாசிப்பயறு, தட்டை மற்றும் நிலக்கடலை அகியவற்றுக்கு விதைப்பண்ணை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள விவசாயிகள், அந்தியூர் வட்டார விவசாய வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகி பயன்பெறலாம் என, வேளாண் துறை அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

Source : Dinamalar

No comments:

Post a Comment