Tuesday, June 27, 2017

மழைநீர் சேகரிப்பு குறித்து வேளாண் அதிகாரி யோசனை

மழை நீர் சேகரிப்பின் அவசியம் குறித்து, டி.என்.பாளையம் வேளாண்மை உதவி இயக்குனர் சுந்தரராஜன், யோசனை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: விவசாய நிலத்தை மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை, சட்டிகலப்பை அல்லது உளிக்கலப்பையால், உழவு செய்வதன் மூலம், அடி மண் மேலே வந்து, மழைநீர் அடி மண்ணில் இறங்கி, நிலத்தடி நீர் வளம் பெருகும். அதேபோல் சரிவான பகுதிக்கு குறுக்கே உழவு செய்வதால், மழைநீர் வீணாகாமல் தேங்கி நிற்கும். நிலக்கடலை மற்றும் சிறுதானியங்களை, அகலப்பாத்தி முறையில் விதைக்க வேண்டும். தோட்ட நிலங்களில் கிணறுகளுக்கு அருகில், பண்ணை குட்டை அமைத்தால் நிலத்தடிநீர் வளம் பெருகும்.

Source : Dinamalar

1 comment:

  1. Jammy Monkey slots by Pragmatic Play - JMHub
    Download the demo 구리 출장안마 free. Jammy Monkey slots. This slot has 243649 ways to 통영 출장안마 win and you 제주도 출장마사지 can win up 하남 출장안마 to 50000x 영천 출장마사지 the stake with your first deposit.

    ReplyDelete